நடப்பு உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெறாமல் வெளியேறிய அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆடுகளத்தின் தன்மையை இலங்கை வீரர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.
இதற்காக இனிமேலும் யாரையும் சாடி பயனில்லை.
தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன் இலங்கை குழாம் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போதிலும் ஆடுகளத்தை புரிந்துகொள்ள தவறி விட்டது.
எவ்வாறாயினும், அணியின் மோசமான ஆட்டத்தை மன்னிக்க முடியாது.
அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.