முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என மனோ செல்வம் அமைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் எம்.பிக்கள் கனடிய ராஜதந்திரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
13ம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்கு தெரியும்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார்.
அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மூவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.