மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஈச்சந்தீவு இராமகிருஸ்ணா முன்பள்ளி பாடசாலையில் சிறார்களுக்கு இலைக்கஞ்சிக் கோப்பை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தினால் இப்பிரதேசத்திலுள்ள கரவெட்டி, புதுமண்டபத்தடி ஆகிய இரு வங்கி வலயப் பிரிவுகளிலுள்ள இரண்டு முன்பள்ளி நிலையங்களில் இவ் இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி, முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கததுரை, புதுமண்டபத்தடி வங்கி முகாமையாளர்
ஜெயசீலன், கரவெட்டி வங்கி முகாமையாளர் பிரியதர்சினி, சமூக அபிவிருத்தி உதவியாளர், முன்பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சிறார்களின் போசாக்கு மட்டத்தினை உயர்த்தும் பொருட்டு ஈச்சத்தீவு இராமகிருஸ்ணா முன்பள்ளி, மண்டபத்தடி பாலர் பாடசாலை ஆகியவற்றில் இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை இவ் இலைக்கஞ்சி உணவு வழங்கும் செயற்திட்டம் சமுர்த்தி
திணைக்களம் ஊடாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.