ஈரானில் பேருந்து விபத்து: பாகிஸ்தான் நாட்டு யாத்திரீகர்கள் 28 பேர் பலி

0
76

ஈரானின் யாஸ்த் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த 28 யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளனர். 7ம் நூற்றாண்டில் மரணித்த ஷியா துறவியை வழிபடுவதற்காக சென்றுகொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 23 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 14 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.