ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல் இடம்பெற்று மூன்றாண்டுகளா கின்றன. உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதலை கேட்டும், படித்தும் அறிந்திருந்த இலங்கையர்கள் – இஸ்லாமிய பங்கரவாத தாக்குதல் எப்படியிருக்கும் என்பதை முதல் முதலாக அறிந்துகொண் டனர். விடுதலைப் புலிகளின் பல தற்கொலை தாக்குதல்களை சிங்கள மக்கள் அறிந்திருக்கின்றனர்.
ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தேவாலயங்களை இலக்காகக் கொண்டோ, அப்பாவி சிங்கள மக்களை இலக்காகக் கொண்டதாகவோ இருந்ததில்லை. ஈஸ்டர் தின தாக்குதல்கள் இடம்பெற்றபோது, தென்னிலங்கையை சேர்ந்த பலர் இவ்வாறான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் – இப்போதும் பல கேள்விகளுக்கும், சந்தேகங் களுக்குமான ஒரு விடயமாகவே, கத்தோலிக்கர்களால் நோக்கப்படு கின்றது. குறிப்பாக, இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித், இந்த தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகங்களை முன்வைத்து வரு கின்றார். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்று குரலெழுப்பி வருகின்றார். ஆனாலும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அப்பாவி மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் களுக்கு – எத்தகைய புனித விளக்கங்களை கூறினாலும் – அது ஒரு மோசமான செயலாகும். அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ப வர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மனித குலத்தால் வெறுக்கப்பட வேண்டியவர்கள்தான். அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலோடு சம்பந் தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டுமென்னும் கோரிக்கை நியாயமானது.
2009 இற்கு பின்னர் வெடிகுண்டு சத்தத்தை அறிந்திராக சிங்கள மக்கள் மத்தியில், ஈஸ்டர் தாக்குதல் பெரும் அச்சத்தையும் பதட்டத் தையும் ஏற்படுத்தியிருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் கேள்விகள் எழுந்தன. இந்த நிலைமையே மறுபுறமாக, ராஜபக்ஷக்களின் மீள் – எழுச்சிக்கு வழிவகுத்தது. ஈஸ் டர்தின தாக்குதல், ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் இயலாமை யாகவே நோக்கப்பட்டது.
ராஜபக்ஷக்களை மீளவும் கொண்டுவருவதன் மூலம்தான்
நிலைமைகளை சரிசெய்ய முடியுமென்னும் புரிதல் பெரும்பாலான சிங்களவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த இடம்தான், ராஜபக்ஷக்களின்
மீள் எழுச்சியை சாத்தியப்படுத்தியது. இந்த பின்புலத்தில் நோக்கினால்,
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியில் ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பெரிய பங்குண்டு. அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறாதிருந்திருந்தால், சிங்கள மக்கள் சாதாரணமாகவே வாக்களித்திருப்பர். எழுச்சியுற்றி ருக்கமாட்டார்கள். ஆனால் இன்று நடந்திருப்பதோ வேறு.
சரியாக மூன்றாண்டுகளில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக சிங்கள எதிர்ப்பலையொன்று உருவாகியிருக்கின்றது. தாங்கள் எதிர்பார்த்தது போன்று, ராஜபக்ஷக்கள் மீட்பர்கள் அல்லர் – என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். அதன் விளைவாகவே ஜனாதி பதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி சிங்கள மக்கள் வீதிக்கு வந்திருக் கின்றனர். சிங்கள பெருந் – தேசியவாதத்தின் இயலாமை தொடர்பில் படித்த சிங்கள தலைமுறையொன்று சிந்திக்க முற்படுவதாக தெரி கின்றது. ஏனெனில் அவர்கள் மீட்பர்களாக கருதியவர்கள் எவராலும், நாட்டின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக நான்தான் – நீங்கள் தேடிய தலைவன் என்று பிரகடணம் செய்த ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம், நாடு, வங்குரோத்து அடைந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது.