உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இரண்டாவது சிரேஷ்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ், கார்கிவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.
அத்துடன் மற்றுமொரு இராணுவ அதிகாரியான அண்டரி சுகோவெட்ஸ்கி கடந்த வாரம் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் படையினர் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவின் 11,000 துருப்புகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ரஷ்ய தரப்பில் 500 பேர் மாத்திரமே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இரு தரப்பு உயிரிழப்புகளும் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் பெலாரஸூவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைகளை ஜப்பான் அறிவித்துள்ளது.
இதற்கமைய 20 ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராகவும் தனிப்பட்ட தடைகளை ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் சிலர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நிர்வாகத்தின் துணைத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய பலரும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் பெலருஸை சேர்ந்த 12 பேருக்கு எதிரான தடைகளையும் ஜப்பான் அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவிற்கு எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஜப்பான் தடை விதித்துள்ளது.