
அவுஸ்திரேலியா உக்ரைன் நடவடிக்கைகளிற்கு ஆதரவாக ஜேர்மனிக்கு விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது.
உக்ரைனிற்கு இராணுவ மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியா கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது.
ஜேர்மன் சான்சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய விமானப்படை ஈ-7ஏ வெட்ஜ்டெய்ல் விமானத்தை ஒக்டோபர் முதல் ஆறு மாதங்களிற்கு வழங்கவுள்ளது.
உக்ரைனிற்கு மிகவும் அவசியமான பன்னாட்டு விநியோகத்தை பாதுகாப்பதற்காக இந்த விமானங்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளது.
ஜேர்மனியிலிருந்து இயங்கும் இந்த விமானம் முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும்.