உக்ரைனில் அமைதி ஏற்பட வேண்டும் என இந்தியா விரும்புவதாக, உக்ரைன் ஜனாதிபதி முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு நேற்றைய தினம் சென்ற, இந்தியப் பிரதமர், அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.
இதன்போது, ‘உக்ரைன் மற்றும் ரஸ்ய போரில், இந்தியா ஆரம்பத்தில் இருந்து அமைதியின் பக்கம் நிற்கின்றது. நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கின்றோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்திலிருந்து வந்திருக்கின்றோம். அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர்.
நெருக்கடிகளில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை நாம் காண வேண்டும். உக்ரைன் அமைதிக்குத் திரும்புவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக உள்ளது’ என்றும் இந்தியப் பிரதமர், உக்ரைன் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார்.