உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு

0
31

உக்ரைனுடனான போரை கடந்த 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இன்று (11) முதல் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது. அதேவேளை, போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும், அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு 15ஆம்திகதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.