உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் குழந்தை உட்பட 7 பேர் பலி

0
25

உக்ரைனில் ரஷ்யா நேற்று முன்தினம்(22) இரவு நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் மீது ரஷ்யா 147 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 97 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் 25 டிரோன்கள் இலக்கு தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 இந்தத் தாக்குதலானது உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், சுமி, செர்னிஹிவ், ஒடேசா, டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் நடத்தப்பட்டதாக  உக்ரைன் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் இன்று நடைபெற உள்ள நிலையில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பார்கள் என உக்ரைன்  ஜனாதிபதி கூறியிருந்தார்.