உடபுஸ்ஸலாவை, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இருவேறு படுகொலை சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி, உடபுஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரபானவத்த பிரதேசத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரபானவத்த, உடபுஸ்ஸலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் ஐந்து இளைஞர்கள் இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் நிலையில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதில் குறித்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இரத்தினபுரி பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொட்டுபலதென்ன, பலாங்கொடை பிரதேசத்தில் நபரொருவர் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை, தொட்டுபலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் என்றும் இவ்வாறான சூழ்நிலையிலேயே அவர் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.