உண்மையான சமாதானத்தை உறுதி செய்ய 13வது திருத்தத்தை அமுல்படுத்த சஜித் கோரிக்கை

0
407

உண்மையான சமாதானத்தை உறுதிசெய்வதற்காக ஸ்ரீலங்காவில் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் இன்னும் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் நாடு இன்னும் சுதந்திரமடையவில்லை என்றே அர்த்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றியபோது தெரிவித்ததை வருமாறு:

ஆயுதப் போரினை அடுத்து உருவாகியிருக்கும் இந்த சூழலை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியினருக்கு பாதுகாப்பு அற்ற தன்மை நிலவுவதாக இருந்தால், தொடர்ந்தும் அநீதி ஏற்படுவதாக அவர்கள் நினைப்பதாக இருந்தால், அந்த பிச்சினைகளுக்கு மத்தியில் எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில்லை. அதனால் அந்த தொகுதியினருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்து, விசேடமாக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, அந்த மக்கள் தொகுதியினருக்கும் மதத்தவர்களுக்கும் செவிசாய்த்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பாதுகாப்பற்ற நிலைதொடர்பில் அவர்களது வேண்டுகோல்களுக்கும் செவிசாய்த்து, வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த வெற்றியை, விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்”- என்றார்.