சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வடக்கு-கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று திருகோணமலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த,வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
தமது உறவுகளுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் தமக்கான நீதியை வழங்க முன் வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குரலெழுப்பினர்.
அரசியல் செயற்பாட்டாளர் ரஜீவ்காந் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு உறுப்பினர்கள் என பெருந்திரளானோர், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரிய போராட்டத்தில் கலந்துகொண்டனர்.