உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முற்றாக விலகினார் துஸ்மந்த சமீர!

0
185

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரஇ 2022ம் ஆண்டிற்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் தொடர்ந்தும் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய துஷ்மந்த சமீர இடைநடுவே உபாதைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.