உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 65 இலட்சத்தைத் தாண்டியது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகளுக்குப் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 65 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 617 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 35 ஆயிரத்து 645 பேருக்கும், இத்தாலியில் 34 ஆயிரத்து 283 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 1,18,69,289
இந்தியா – 89,12,908
பிரேசில் – 59,47,403
பிரான்ஸ் – 20,65,138
ரஷ்யா – 19,91,998