சர்வதேச ரீதியில் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை நெருங்குவதை இது வெளிப்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம் வெளியிட்டுள்ளது.
பிரேசில், இந்தியா, போலந்து, துருக்கி உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.