உலப்பனே சுமங்கல தேரருக்கு விளக்கமறியல்

0
105
உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையிலுள்ள பல குடிசை வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றுவதற்கு முற்பட்டபோது அதற்கு இடையூறு விளைவித்ததாக உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட நால்வர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, அனுஜ பிரேமரத்ன ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.