கொவிட் தாக்கத்தால் அன்றாடம் வாழ்வாதாரத்தை இழந்து பயணத் தடையில் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கூழாவடிச்சேனை, நெடியமடு ஆகிய இரண்டு கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்களால் இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து மட்டக்களப்பு நண்பர்கள் ’93 எனும் பெயரில் செயற்படும் சமூக ஆர்வலர்களால் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
