பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை தயாராவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்துப் போராட, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்த ஒரு வருடத்தின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இருதரப்பு கடனளிப்பவர்கள் சீனாவுக்காக காத்திருக்கும் நிலையிலும்இ பலதரப்பு கடன் வழங்குபவர்கள் அதே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சீனாவின் வலியுறுத்தல்களாலும், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தற்போது முட்டுக்கட்டைக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தற்போது ஒரு வார காலப் பயணமாக சீனாவுக்குச் பயணமாகியுள்ளார்.
எனினும் இதுவரையில், இலங்கையின் கடன் நிவாரணக் கோரிக்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இல்லை என்று தி ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில்இ இலங்கையின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை பலரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது மக்களின் சேமிப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களில் சாத்தியமான தாக்கத்தை எழுப்புகிறது என்றும் தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.