உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவு நீடிப்பு!!

0
24

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை (04) வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு  மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.