ஊழியர்களை தாக்கிய வைத்தியர் கைது

0
117
நேற்று முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றமையால் தாம் தாக்கப்பட்டதாக கராப்பிடிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.குறித்த இரண்டு பேரும் கராப்பிட்டிய வைத்தியசாலை விசேட வைத்தியர் ஒருவரினால் தாம்  தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், அவர்கள் குறித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நேற்று பிற்பகல் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் ஒருவரையும் பெண் ஊழியர் ஒருவரையும் தாக்கியதாக கூறப்படும் வைத்தியரை காலி பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட வைத்தியர் பொலிஸ் பாதுகாப்பில் தனியார் வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், இன்று அதிகாலை 3.00 மணி முதல் இருபதுக்கு மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் தமது பணியை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.