படுக்கையைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஊவா பரணகம, மஸ்பன்ன பகுதியில் பதிவாகியுள்ளது.
மஸ்பன்ன, வெலேக்கடேயில் வீடு ஒன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற 7 மாத பெண் குழந்தையே வீட்டின் கட்டிலில் இருந்து வீழ்ந்து, மர பாதுகாப்பு பலகையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டு பின்னர் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் சென்று பார்த்தபோது, கட்டிலைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் குழந்தை மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.
இந்நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.