அனுராதபுரம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.
கொடக்கவெல, நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே எரிபொருளுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 400 லீற்றர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.