எரிபொருள்: நாடு தழுவிய ரீதியில் இன்றும் வாகனங்கள் காத்திருப்பு!

0
199

இந்தியக்கடன் திட்டத்தின் கீழான எரிபொருளை தாங்கிய இறுதிக்கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்த போதிலும் எரிபொருளுக்கான வரிசை நாடு தழுவிய ரீதியில் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரை நீண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், நாட்டின் தலைநகரான கொழும்பின் முக்கிய பகுதிகளின் வீதிகள் இன்றையதினம் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக வெறிச்சோடிக்காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இரண்டடுக்கு மூன்றடுக்கு வரிசைகளில் வாகன சாரதிகள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதேவேளை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருப்பதன் காரணமாக மரணங்கள் பதிவாகும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.