30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கோரி, பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

கடந்த வாரம் பாடசாலைகள் நடத்தப்பட்டதைப் போலவே எதிர்வரும் வாரமும் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எரிபொருள் விநியேகத்தில் தொடரும் நெருக்களுக்கு தீர்வு கோரி, நேற்று நள்ளிரவு முதல் சில பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளன. கியூ.ஆர் முறைமைக்கமைய போதுமான அளவு டீசல் கிடைக்கவில்லை என தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சில பேருந்து சங்கங்கள் முன்னெடுக்கின்றன. அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம், அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சங்கம், பொதுஜன ஐக்கிய பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை ஐக்கிய பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles