எரிவாயு கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை: சமையல் எரிவாயு விநியோகம் இன்றும் இல்லை!

0
289

நாட்டில் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே எரிவாயு கொள்வனவு செய்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 3 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்படாமையால், இதுவரையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, நேற்றைய தினமும் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.