கொழும்பில் ஆமர் வீதியில் எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக
ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் ஆமர் வீதியில் இன்று பகல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது.
அங்கு எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில்,
எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த பாரவூர்தி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 100 எரிவாயு சிலிண்டர்கள் வரை காணாமல்
போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
காணாமல் போன எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.