எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக 600 அரச அதிகாரிகளும், 500 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
48 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் தேர்தலில் போட்டியிடுகின்றன.