எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ நூல் வெளியீடு

0
186

ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரனின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று இடம்பெற்றது.

யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைaகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வுக்கு கலாநிதி தி.செல்வமனோகரன் தலைமை தாங்கினார்.

நூலாசிரியரான கோகிலா மகேந்திரன் ‘உறவுகள்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றியதையடுத்து வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

தொடர்ந்து நூல் வெளியீட்டுரையினை எழுத்தாளர் கந்தர்மடம் அ.அஜந்தனும், நூல் தொடர்பிலான கருத்துரைகளினை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களான அஜந்தகுமார், இராஜேஷ்கண்ணன் ஆகியோரும் வழங்க ஏற்புரையினை நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் எஸ்.பரணீதரன் நன்றியுரையினை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கல்வியலாளர்கள், வாசகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.