எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியிலிருந்து அரை சொகுசு பேருந்து சேவை இரத்துச் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.