ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற அமர்வின் போது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பரஸ்பர வரிகள் விதிக்கப்படுவதாகக் கூறினார்.