நீண்ட வரலாற்றினை கொண்ட மட்டக்களப்பு ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை ‘எல்மிஸ் வெல்கம’ வீதி என பெயர் மாற்றம் செய்யும் கிழக்கு மாகாண ஆளுநரின் முன்னெடுப்புக்களுக்கு ஜனநாயக மக்கள் கட்சி அதன் பலத்த எதிர்ப்பினை வெளியிடுவதுடன் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளது.
மகஜர் இன்று காலை ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்திடம் கையளிக்கப்பட்டது .கட்சியின் பொதுச் செயலாளர் கே.அப்துல் வாஜித், கட்சியின் உப தலைவர் ஏ.எம்.நசுருதீன், கட்சியினுடைய ஆலோசகர் யு.ஏ. சக்கரியா ஆகியோர்
இணைந்து மகஜரைக் கையளித்தனர்.
பெரும்பான்மையாக முஸ்லிம்களையும் தமிழர்களையும் கொண்ட ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்ற முயற்சிக்கும் விவகாரத்திற்கு அப்பகுதி மக்களிடையே சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.