ஏ.ஐ. தொழில்நுட்ப யுத்த ட்ரோன்களை சோதனையில் ஈடுபடுத்திய அமெரிக்கா!

0
12

செயற்கை நுண்ணறிவுத் (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஆளில்லா விமானங்களுக்கான (ட்ரோன்) சோதனைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

வை.எப்.கியூ-42ஏ மற்றும் வை.எப்.கியூ-44ஏ ஆகிய இரண்டு ஆளில்லா விமானங்களும் தற்போது சோதனை மட்டத்தில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க விமானப்படை தளபதி ஜெனரல் டேவிட் அல்வின் இது தொடர்பில் குறிப்பிடுகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்யும் இரண்டு முன்னணி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள இந்த ட்ரோன்கள் அமெரிக்க இராணுவ வரலாற்றில் மைல்கல் முக்கியத்துவம் பெற்றவையாகும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயக்கப்படக்கூடிய தன்னியக்க கட்டமைப்புக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ள நிறுவனமே இந்த ஆளில்லா விமானங்களை உருவாக்கியுள்ளது. இது, வடிவமைப்புக்கும் விமானத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதோடு ஒருங்கிணைப்பு அபாயங்களையும் தவிர்க்கக்கூடியதாக அமையும்.

அத்தோடு நம்பிக்கையை ஊக்குவிக்கும். அடுத்த தலைமுறை ஆளில்லா விமானங்களை தன்னியக்கக் கட்டமைப்புக்களை கொண்டவையாக உருவாக்குவதன் மூலம் வான்வழிப் போரில் ஒரு மூலோபாய மாற்றத்தை பிரதிபலிக்க வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.