ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, சிவில் மற்றும் இராஜதந்திர தரப்பினரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரச மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திக்கவுள்ளார்