ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக் காலம் நிறைவு!

0
203

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிற்செல் பச்லெட் அம்மையாரின் பதவிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதனால், அவர் தனது தாய் நாடான சிலிக்கு திரும்பவுள்ளார்.
பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அந்தப் பதவியை வகிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தபோதும், அதனை நிராகரித்த அவர், தனது தாயகமான சிலிக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப் போர் காலத்தில் இடம்பெற்றவை என்று கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், மனித குலத்துக்கு விரோதமான நடவடிக்கைகள், இனப்பிரச்சினை தொடர்பாக பச்லெட் அம்மையார் கரிசனை கொண்டிருந்தார்.
இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவலைகள் – கண்டனங்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஒரு பெண்ணாகவும் வாழ்நாள் முழுவதும் பெண்ணியவாதியாகவும் நம் அனைவருக்கும் பயனளிக்கும் சமூக இயக்கங்களில் முன்னணியில் இருந்த பெண் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு நான் நன்றிகளை தெரிவிக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் – கேட்கப்படாத குரல்களை கொண்டுவந்தவர்கள். நான் தாயகம் திரும்புகிறபோதும் உங்களுடன் தொடர்ந்தும் நிற்பேன். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான எனது பயணம் இத்துடன் நிறைவடையாது என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ‘உரிமைகள் திரும்பப் பெறப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருப்பது இன்றியமையாதது.
ஜெனீவாவிலும் உலகெங்கிலும் உள்ள செய்தியாளர்களுக்கு, அவர்கள் செய்யும் இன்றியமையாத பணிக்காக நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தில் எச்சரிக்கையை எழுப்பும்போது, ​​அது சத்தமாக ஒலிப்பது முக்கியம், உலக ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு நடைமுறைகள் பொறிமுறை ஆகியவற்றிற்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என பச்லெட் அம்மமையார் தெரிவித்துள்ளார்.