ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்!

0
1

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இன்றையதினம் ஜெனிவா பயணமாகவுள்ளது.

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசேட அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும் 28ஆம் திகதிவரை மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கலந்து கொள்ளவுள்ளது.

இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேச மட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு இந்த அறிக்கை அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.