ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் எம்முடன் இணைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியினர் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
‘கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எமது அரசியல் செயற்பாடுகள் கொண்டுசெல்லப்படவில்லை. கடந்தமுறை போன்று இந்த முறை மே தினக்கூட்டத்தை பெருமளவில் நாம் நடத்தவில்லை. எனினும், அனைத்து அமைப்பாளர்களும் தங்களின் தொகுதிகளிலிருந்து கட்சியை நேசிப்பவர்களுடன் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினர் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு செல்லவுள்ளனர். இதன்போது, பலர் எம்முடன் இணைவார்கள்’ என தெரிவித்துள்ளார்.