ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீரில் மூழ்கி மூவர் பலி!

0
168

சுற்றுலா பயணம் சென்று சிலாபம் கடல் பகுதியில் நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 35 வயதான தந்தை, 7 வயதான மகள் மற்றும் 6 வயதான அவர்களின் உறவினரின் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.