ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதுதான் தனது இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிசிசிஐ கவுரவ செயலாளர் ஜெய்ஷா இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து கவுதம் காம்பீருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.