26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஓட்டோ விபத்தில் ஒரு வயதுக் குழந்தை பலி! நால்வர் படுகாயம்!!- பதுளையில் பரிதாபம்!!!

பதுளைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுக் குழந்தை பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை – மஹியங்கனை வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

வீதியில் பயணித்த ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டையிழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஆறு வயது சிறுவனும், ஓட்டோ சாரதியும், அவரது மனைவியும் வேறு ஒர் பெண்ணும் உள்ளடங்குகின்றனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles