கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

0
97

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய மது ஒழிப்புபிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன் குணவர்த்தன மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்களான ஜெயசூரிய, பணாவர, பிரதீபன் ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது கசிப்பு 56 ஆயிரம் மில்லிலீற்றர், 3 பரல்களுக்குள் 75 ஆயிரம் மில்லி மீற்றர் எரிந்த கோடா, கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டன.

மேலும் உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.