கடந்த வாரம் மட்டும் 1,590 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே 50.8 சதவீதமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 56 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.