கடந்த 5 வருடங்களில் நாடளாவிய ரீதியில் 570 ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரயில் மார்க்கம் மற்றும் ரயில் பழுதுபார்க்கும் இடம் ஆகியவற்றில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதற்கமைய 2020 இல் 98 சம்பவங்களும், 2021 இல் 115 சம்பவங்களும், 2022 இல் 132 சம்பவங்களும், 2023 இல் 139 சம்பவங்களும், 2024 இல் 86 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.