கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் மாயம்!

0
100

தங்காலை, மாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை  பொலிஸார் தெரிவித்தனர். 

பெலியத்தை, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடைய இளைஞனே கடலில் மூழ்கி காணமல் போயுள்ளார். 

காணாமல் போன இளைஞனைத்  தேடும்  நடவடிக்கையை தங்காலை கடற்படையின் சுழியோடல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவெல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த அவர் பலருடன் கடலில் நீராடும் போது அலையில் அள்ளுன்டு  செல்லப்பட்டுக் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.