கடவுச்சீட்டு விநியோகம்: குடிவரவு, குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

0
316

திகதி மற்றும் நேர அடிப்படையில், முற்பதிவு செய்தோருக்கு மாத்திரமே, எதிர்வரும் நாட்களில், கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீளவும் பரவி வரும், கொரோனா தொற்று அச்சுறுதலை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசரமாக வெளிநாடு செல்ல உள்ளோருக்கான, விசேட ஒரு நாள் சேவை, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, அவசர தேவையின் நிமித்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதாயின், தமது தகவல்களை, 070 631 17 11 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.