கட்டுகுருந்த கடற்கரையில் மிதந்து வந்த மர்மப்பொருள்!

0
71

களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது.

களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தங்கியிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன்இ பரிசோதனைக்காக சாதனத்தை பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர்.

அதிலிருந்து ஓரளவு வெளிச்சம் வெளிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள களுத்துறை தெற்கு பொலிஸார் குறித்த சாதனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.