யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில், வீதியை விட்டு விலகி வயலுக்குள் இறங்கிய பேருந்தை, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்கள் மீட்டனர்.
குறித்த பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில், பேருந்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.