கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வேன்- பெண் ஒருவர் பலி!

0
130

கெப்பெட்டிபொல-பெலுன்கல பிரதேசத்தில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காயமடைந்தவர்கள் வெலிமடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே விபத்துக்குள்ளானவர்கள் ஆவர்.
வெலிமடை, போகஹகும்புர பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.