அவுஸ்திரேலிய – குயின்ஸ்லாந்தில் பெண்ணொருவர் கணவரால் உடல் மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை கொன்றுள்ளார்.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த 69 வயதான ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்றுள்ளார்.
கணவனின் இறுதி உடற்கூறு ஆய்வில், மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதே மரணத்திற்கான காரணம் என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அவர் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் விசாரணைக் கைதியாக 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், உடனடியாக பரோலில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.