கண்டியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இருவர் காயம்

0
99
கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பெரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.இன்று காலை 11:00 மணியளவில் இரண்டு மரங்களும் முறிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் ஸ்தலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி தலைமையக பொலிஸ் மாநகர தீயணைப்பு பிரிவு, இராணுவம் மற்றும் நகர சபை அதிகாரிகள் இணைந்து முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றும் பணியை முன்னெடுத்ததுடன், இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து பல மணித்தியாலங்களுக்கு பாதிக்கப்பட்டது.